Thursday 1 April 2010

சாமியார்கள் வேண்டாம்! சாமியார்களை படைத்த இறைவன் ஒருவன் போதும் அனைத்திற்க்கும்.


இறைவனின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாக இருந்துவருகின்றது. பணம், புகழ், உல்லாச வாழ்க்கைக்காக இந்த ஆசாமிகள் (போலி) சாமிகளாக மாறிவிடுகின்றனர்.
இந்த போலிசாமியார்களின் லிஸ்ட்டில் புதிதாய் சேர்ந்தவன் தமிழகத்தை சேர்ந்த ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள். பிரபல நடிகையுடன் மிககேவலமாக நடந்துகொண்ட காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளிவந்த பிறகு இந்த காம கொடூரனின் சுயரூபம் வெளி உலகத்திற்க்கு வந்தது. கடவுளாக மக்களால் வணங்கப்பட்ட இந்த காம கயவனை தமிழக, கர்நாடக அரசுகள் தேடி வருகின்றது.

ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமி? :
திருவண்ணாமலையில் 1978-ல் பிறந்த இந்த ராஜசேகரன் முதலியார் சமூகத்தை சேர்ந்தவன். 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்தான். தமிழகத்தில் இவனுடைய பூச்சாண்டி எடுபடவில்லை என பெங்களூர் சென்றார். மக்களை கவரும் வண்ணம் பேச துவங்கியதால் இந்த தொழிலில் படுவேகமாக முன்னேறி மிக குருகிய வயதில் (போலி) கடளவுளானான்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவனுக்கு கோயில் உள்ளது.. இவனுடைய கதவை திற காற்று வரும் என்கின்ற பேச்சு (புத்தக வடிவிலும் உள்ளது) இவனுக்கு பெரும் புகழை தேடிதந்தது. நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இந்த (போலி) சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. தியானம் கற்று தருகின்றேன், ஆசனம் கற்று தருகின்றேன் என்ற பெயரில் பலகோடிகளை சம்பாதித்துள்ளான் இந்த விடலை பையன். உடல் தேவைகளுக்காக பல் வேறு நடிகளைகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு இன்று காவல் துறைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளான் இந்த சில்மிஷ இளைஞன்.

பத்திரிக்கைகளும் (போலி) சாமியார்களும் :
தமிழகத்தில் ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ஆதரவான பத்திரிக்கை உண்டு. இந்த நித்தியானந்தாவின் ஆஸ்தான பத்திரிக்கை குமுதம் ஆகும், ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் பாபா, சுகபோனந்தா இந்த நித்தியானந்தா போன்ற சாமியார்களின் கிருக்கு வார்தைகளை தத்துவங்களாக மக்களிடம் எடுத்து செல்வது இந்த குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள்.
(ஜக்கி வாசுதேவின் ஆஸ்தான பத்திரிக்கை நக்கீரன்).

இந்த ஈன பிறவியை இன்டெர்னெட்டில் பிரபலமாக்கியது சாரு நிவேதிதா. குறி சொல்லும் பையனை கார்ப்ரேட் சாமியாராக மாற்றியது குமுதம் பத்திரிக்கையும் சாரு நிவேதிதாவும் தான்.

ஏன் இவர்கள் சாமியார்கள் ஆனார்கள்
இன்றைக்கு அரசியலைவிட மிக அதிகமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக இந்த சாமியார் தொழில் உள்ளது. பல கோடிகளை கொள்ளை அடிக்கும் (உயர்பதவிகளில் இருக்கும்) அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த சாமியார்கள்தான் புகழிடம். ஊர் பணத்தை ஏமாற்றுகின்றோமே என மன உலைச்சலில் வாடும் இவர்களுக்கு இந்த சாமியார்கள் யோகா மூலம் மன உலைசலை நீக்கி மேலும் கொள்ளை அடிக்க வழிவகை செய்கின்றனர்.
மேலும் பண்ணாட்டு நிறுவங்களில் பல லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகின்றனர், இவர்களிடமும் தியானம் கற்று கொடுக்கின்றோம் என ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை வாங்குகின்றனர் இந்த கார்ப்ரேட் சாமியார்கள் . இப்படி கோடிகணக்கில் கொள்ளை அடிக்கும் பணத்திற்க்கு வருமான வரி கிடையாது.
இந்த சாமியார்களிடம் உள்ள பணத்தையும் சொத்துகளையும் பறிமுதல் செய்தாலே உலக வங்கியிடம் இந்தியா வாங்கி உள்ள கடனில் பெரும் பகுதியை அடைத்துவிடலாம் அவ்வளவு கோடிகணக்கான ரூபாய் மதிபுள்ள சொத்துகள்.
வீட்டில் கொள்ளை, வங்கியில் கொள்ளை என கேள்வி பட்டுஇருப்பீர்கள், எங்காவது ஆசிரமத்தில் கொள்ளை என கேள்வி பட்டதுண்டா, திருடர்கள் கூட திருடாத அளவிற்க்கு பாதுகாப்பான பணம்.

ஏன்? எங்கு? எப்படி? என்ற கேள்வி இல்லை : வருமான வரி துரை, சுங்க வரிதுரை இவை அதிகமாக சொத்துகள் வைத்து இருப்போரிடன் அவ்வப்போது சோதனை (ரைடு) நடத்தும். இந்த சாமியார்களுக்கு அது (ரைடு) கூட கிடையாது.

உல்லாச வாழ்க்கை : சாமியாராக இருப்பதினால் பெண்களிடம் அதிகமாக நெருங்கிபழகும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதைவைத்து (போலிஸ் தொல்லை இல்லாமல்) பல பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர் இந்த காம சாமியார்கள் .

புகழின் உச்சி : இந்த காம வெறிபிடித்தவர்களுக்கு கடவுளின் அவதாரம் என்ற பட்டம், கோயில் கட்டி வழிபட ஒரு அறியாமை கூட்டம். என்னேரமும் புகழ்ந்து தள்ள துதிபாடும் கூட்டம்.

கோடிகணக்கில் பணத்தை கொட்ட தயாராக இருக்கும் அப்பாவி மக்கள், (கோடிகணக்கான பணதிற்கும் வரிகட்ட தேவை இல்லை). திருடர்கள் கூட தொடப் பயப்படும் பாதுகாப்பான பணம், பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் சொகுசு வாழ்க்கை, சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் (பிரதமர், குடியரசு தலைவராக இருந்தாலும்) காலில் விழுந்து வணங்கும் புகழின் உச்சி. இதற்க்குமேல் கடவுள் என்ற பட்டம். நினைக்கும் போதே கேட்பவர்களை சாமியாராக போய்விடலாமா என தூண்டக்கூடிய ராஜ வாழ்க்கை.

கடவுளின் பெயரால் பொய் சொல்லும் இவர்களுக்கு இப்படி பட்ட உல்லாச வாழ்க்கை ஆனால் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் மேற்சொன்ன எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு (இஸ்லாத்தை) உண்மையான வாழ்க்கை நெறியை நமக்கு போதித்தார்கள். இதிலிருந்தே இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இந்த சத்திய போதனைகளை சொல்ல இறைவனின் எந்த தூதர்களும் மக்களிடன் எந்த கூலியும் கேட்கவில்லை.அல்-குர் ஆன் 26:109 : உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

இஸ்லாத்தில் மோசடி, பொய், விபசாரம் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே இறைவனுக்கு கட்டுபட்டு வாழ்ந்தால் இதைவிட சிறந்த தூய்மையான வாழ்க்கையை இறந்த பிறகு இறைவன் தருவான் என்ற மறுமை நம்பிக்கையே நமக்கு நிரந்த சுகத்தைதரும்.

மக்களே! உண்மைமையான அமைதிபெற அழைக்கின்றது இஸ்லாம்
நாம் படும் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மிக அழகான தீர்வை சொல்கின்றது இஸ்லாம். முழுமையான இறை நம்பிக்கை இல்லாமை, முறையற்ற வழியில் பொருளாதாரத்தை ஈட்டுவது (மோசடி, லஞ்சம்), விபசாரம், பொறாமை இது போன்ற தீய்மைகள்தான் மனிதனின் நிம்மதியை கெடுக்கின்றது. இந்த தீய்மைகளையெல்லாம் தடை செய்த இறைவன் இது போன்ற தீமைகள் இல்லாமல் எப்படி கவலையில்லாமல் வாழ்வது என்ற ஒரு வாழ்க்கை திட்டத்தை இஸ்லாம் என்ற வடிவில் வழங்கிஉள்ளான். உண்மையான இஸ்லாத்தை படித்து அதன்படி நடப்பதன் மூலம் நமது வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துகொள்ளமுடியும்.
அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! நீங்கள் மக்களிடம் அநியாயமான முறையில் (லஞ்சம், மோசடி) கொள்ளை அடிப்பதினால்தான் உங்கள் மனம் அமைதி இன்றி தவிக்கின்றது. போலீஸ் ரைடு வருமோ,பணம் திருடு போய்விடுமோ, நம்மால் பாதிக்கப்பட்டவன் நம்மை கொன்றுவிடுவானோ என்ற அச்சம் தான் உங்கள் மன உலைச்சலுக்கு காரணம். நேர்மையாக இருந்துபாருங்கள், மக்களுக்கு நல்லது செய்துபாருங்கள், லஞ்சம் வாங்காமல் இருந்துபாருங்கள், எத்தனை மக்கள் உங்களை பாராட்டுவார்கள்,பண்ணாட்டு நிறுவங்களில் (MNC) வேலை செய்பவர்களே! பதஷ்ட்டம் இல்லாமல் வேலை பாருங்கள், இந்த நிறுவங்கள் நம்மை வேலையைவிட்டு தூக்கிவிடுவதாக மிரட்டி அடிமைபோல் வேலைவாங்குகின்றனர். இதற்க்கு காரணம் அவர்கள் கொடுக்கும் சொகுசு வாழ்க்கைக்கு நாம் அடிமையாவதே, இவர்கள் வேலையைவிட்டு தூக்கிவிட்டால் எங்கே நாம் வாழும் சொகுசு வாழ்க்கை போய்விடுமோ என்ற பயத்தில் நாம் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டு இருக்கின்ரோம். சிக்கனத்துடன் வாழ பழகிகொண்டால் இவர்கள் மிரட்டல் நம்மை ஏதும் செய்யாது, மன அழுத்தமும் வராது. சாமியார்களுக்கு கொடுக்கும் பணமும் மிச்சமாகும்.

இஸ்லாத்தை உண்மை வடிவில் அறிய நம்மை படைத்த இறைவனின் வார்த்தையான குர் ஆனையும், அதற்க்கு விளக்கமாக ஹதீஸையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இலவசமாக குர் ஆன் Download செய்ய www.onlinepj.com என்ற இனைய தளத்திற்க்கு செல்லுங்கள்.

சாமியார்கள் வேண்டாம்! சாமியார்களை படைத்த இறைவன் ஒருவன் போதும் அனைத்திற்க்கும்.
நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்ய நம்மை படைத்த இறைவன் ஒருவன் போதும். இறைவனுக்கு இடைத்தரகர்கள் கிடையாது, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதி இறைவனே. சாமியாரோ சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிரார் இறைவனோ எப்போதும் உங்கள் கூடவே இருக்கின்றான்.என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்
”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்-குர் ஆன் 2:186)

இறைவன் எல்லாவற்றிக்கும் அதிபதி என்பது உண்மையே, ஆனால் இறைவன் நமக்கு அதை (செல்வத்தை) வழங்குவானா?, நிச்சயம் வழங்குவான், அவன் கருனையாளர்களுக்கெள்ளாம் கருனையாளன்
சில நேரங்களில் ஏன் இறைவன் நம் பிரார்த்தனையை ஏற்பதில்லை ?:நமக்கு உள்ள பிரச்சனைகளுக்கு நாம் நமக்கு தெரிந்த தீர்வை இறைவனிடம் கேட்கின்றோம்
ஆனால் அதைவிட சிறந்த தீர்வை இறைவன் அறிந்து வைத்துள்ளான். நாம் கேட்பதை கொடுப்பதைவிட நமக்கு எது சிறந்ததோ அதைகொடுக்கின்றான் நம் இறைவன். நம் தேவைகளை நம்மை விட இறைவன் அதிகம் அறிந்தவன். நாம் இறைவனுக்கு கட்டுபட்டு நல்ல காரியங்களை செய்து நமது தேவைகளை தொடர்ந்து இறைவனிடம் கேட்டுகொன்டே இருப்போம் இறைவன் நமக்கு எப்போதும் சிறந்ததையே வழங்கிகொண்டு இருப்பான், இறைவன் வழங்கியதில் திருப்தி கொள்வோம், அமைதியாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்.

சங்பரிவாரத்தின் பார்பன பக்தி : இந்த நித்தியானந்த சாமியார் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை கண்டித்து ஆசிரமங்களை சூரையாடும் இந்த சங்பரிவார கும்பல்கள், காஞ்சி சங்கராசாரியார் இதே போல் பெண்களிடம் சிலமிஷம் செய்ததாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டபட்ட போது , காஞ்சி சங்கராசாரியாரின் ஆசிரமத்தை சூரையாடவேண்டியதுதானே. சங்கராசாரியார் விஷயத்தில் அடக்கிவாசித்தன இந்த சங்பரிவார கும்பல். ஏனென்றால் காஞ்சி சங்கராசாரியார் ஒரு பார்பனர். ஆனால் இவரோ ஒரு முதலியார். பார்பனர்களுக்கு ஒரு நீதி பாமரர்களுக்கு ஒரு நீதி என்ற மனு தர்மத்தை கடைபிடிக்கின்றனர் இந்த பார்பன விசுவாசிகள்.


(courtesy:www.tntj.net)

No comments: